உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு

தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு

ப.வேலுார், ப.வேலுார் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், 18,838 தேங்காய்கள் வரத்தாகின. அதிகபட்சம் கிலோ, 66.70 ரூபாய், குறைந்தபட்சம், 50.10 ரூபாய், சராசரி, 65.90 ரூபாய் என, 4 லட்சத்து, 84,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 14,266 தேங்காய்கள் வரத்தாகின. அதிகபட்சம் கிலோ, 70.79 ரூபாய், குறைந்தபட்சம், 52.10 ரூபாய், சராசரி, 69.79 ரூபாய் என, 3 லட்சத்து, 97,000 ரூபாய்க்கு விற்பனையாகின. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தேங்காய் விலை உயர்ந்தே விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !