உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேங்காய் பருப்பு ஏலம்

தேங்காய் பருப்பு ஏலம்

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்க மேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று நடந்த ஏலத்திற்கு, 5,560 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிக பட்சமாக கிலோ, 138.09 ரூபாய், குறைந்தபட்சமாக, 122.99 ரூபாய், சராசரியாக, 130.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஆறு லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ