உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.2.50 லட்சத்துக்கு தே.பருப்பு வியாபாரம்

ரூ.2.50 லட்சத்துக்கு தே.பருப்பு வியாபாரம்

திருச்செங்கோடு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கடந்த, 16ல் தேங்காய் பருப்பு டெண்டரில் முதல் தரம் கிலோ, 155.55 ரூபாய் முதல், 180.55 வரையிலும், இரண்டாம் தரம், 115.20 ரூபாய் முதல், 136.55 வரையிலும் விற்பனையானது. மொத்தம், 62 மூட்டை தேங்காய் பருப்பு, நான்கு லட்சத்து, 5,000 ரூபாய்க்கு விற்பனையானது.இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு டெண்டரில் முதல் தரம், கிலோ 165.75 ரூபாய் முதல், 195.50 ரூபாய், இரண்டாம் தரம், 135.75 ரூபாய் முதல், 155.75 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 40 மூட்டை 2லட்சத்து, 50,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை