உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிக்க பணம் தர மறுத்த பாட்டியை கொலை செய்த பாசக்கார பேரன் கைது

குடிக்க பணம் தர மறுத்த பாட்டியை கொலை செய்த பாசக்கார பேரன் கைது

மோகனுார், மது குடிப்பதற்கு பணம் தரமறுத்த பாட்டியை, உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த 'பாசக்கார' பேரனை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த மணப்பள்ளியை சேர்ந்த பெரியசாமி மனைவி தெய்வானை, 80. கணவர் இறந்த நிலையில் முதியோர் உதவித்தொகை பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில், மகள் வசந்தியின் மகன் வினோத்பாபுவுக்கு, 42, திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால், சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத மனைவி, தன் குழந்தைகளுடன், ஐந்து ஆண்டுகளுக்கு முன், தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து, குடி பழக்கத்துக்கு வினோத்பாபு அடிமையானார். மேலும், பாட்டியிடம் சண்டையிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 4:45 மணிக்கு பாட்டி தெய்வானையிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததுடன் அறிவுரை கூறினார். இதனால், ஆத்திரமடைந்த வினோத்பாபு, அருகில் கிடந்த உருட்டை கட்டையால் பாட்டி தலையில் சரமாரியாக தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே தெய்வானை உயிரிழந்தார். வினோத்பாபு தலைமறைவானார்.மோகனுார் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீசார், தெய்வானை உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் எஸ்.வாழவந்தி பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத்பாபுவை நேற்று போலீசார், கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை