உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை

பூக்கள் விலை சரிவு விவசாயிகள் கவலை

ப.வேலுார், : ப.வேலுார், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், குண்டுமல்லி, சம்பங்கி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தினமும் பூக்களை பறித்து, ப.வேலுார்பூக்கள் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். சமீப நாட்களாக பூக்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. மல்லிகை, முல்லை போன்ற பூக்களின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், தேவை குறைந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.கடந்த வாரம், 800 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ குண்டு மல்லி, நேற்று, 420 ரூபாய், 220 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 60 ரூபாய், 700 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ முல்லை, 320 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற அரளி, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை