மேலும் செய்திகள்
வரத்து குறைவால்அரளி விலை உயர்வு
03-Apr-2025
ப.வேலுார்:-ப.வேலுார் தாலுகாவுக்குட்பட்ட சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம், சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது, பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று பூக்கள் வரத்து அதிகமானது.ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 600 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, 320 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 80 ரூபாய்; 500 ரூபாய்க்கு விற்ற முல்லை, 300 ரூபாய்; 150 ரூபாய்க்கு விற்ற அரளி, 80 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 260 ரூபாய்க்கு விற்பனையாகின.
03-Apr-2025