உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு

ப.வேலுார்: பரமத்தி வேலுார் தாலுகா பகுதி களான பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.அதன்படி, கடந்த வாரம் நடந்த ஏலத்தில், ஒருகிலோ குண்டு-மல்லி, 1,200 ரூபாய்க்கு விற்றது, நேற்று முன்தினம், 1,700 ரூபாய்க்கும்; 150 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 250 ரூபாய்க்கும்; 150 ரூபாய்க்கு விற்ற அரளி, 300 ரூபாய்க்கும்; 800 ரூபாய்க்கு விற்ற முல்லைப்பூ, 1,600 ரூபாய்க்கும் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை