மேலும் செய்திகள்
மழை நீர் தேங்கியதால் பச்சை பயறு செடி அழுகல்
14-Mar-2025
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பகுதியில் பச்சைப்பயறு விதையை மானாவா-ரியாக விதைத்து வருகின்றனர். இதில் அதிக மகசூல் பெற, வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி யோசனை தெரி-வித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பச்சைப்பயறு விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியம். ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். விதை நேர்த்தி செய்ய, 200 கிராம் பாக்கெட் ரைசோபியம் மற்றும் 200 கிராம் பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா, ஒரு பாக்கெட் தமிழக வேளாண்மை பல்கலை தயாரித்த பி.ஜி.பி.ஆர்.-ஐ., அரிசி கஞ்சி-யுடன் கலந்து உபயோகிக்கவும். விதை நேர்த்தி செய்யவில்லையென்றால் பாஸ்போ பாக்டீரியா, 10 பாக்கெட் மற்றும் 10 பாக்கெட் வேளாண்மை பல்கலை தயா-ரித்த பி.ஜி.பி.ஆர்.-ஐ., 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மணலில் கலந்து விதைக்கவும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
14-Mar-2025