மேலும் செய்திகள்
வாழைத்தார் விலை உயர்வு
17-Sep-2024
ப.வேலுார்: ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வால், வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ப.வேலுார், பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங் கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, ப.வேலுாரில் செயல்படும் தினசரி ஏல மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், வரும், 11ல் ஆயுத பூஜையை பண்டிகையால், நேற்று நடந்து ஏலத்தில், கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று, 800 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாலி, 650 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 400 ரூபாய்; மொந்தன் காய், 6 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
17-Sep-2024