உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

வரும் 8ல் இ.பி.எஸ்., பிரசாரம் கூட்டம் நடக்கும் இடம் ஆய்வு

குமாரபாளையம்: குமாரபாளையம், ராஜம் தியேட்டர் பகுதியில், நேற்று மாலை, 7:00 மணிக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்-களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிர-சாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டி-ருந்தது.கரூரில் நடந்த சம்பவத்தை அடுத்து, போதிய பாதுகாப்பு இல்-லையென நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்ததன் பேரில், இ.பி.எஸ்., பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, வரும், 8ல் பிரசார கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மேடை அமைத்து பரப்புரை நடத்த அனுமதி வழங்கப்-படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து, குமாரபாளையம்--பள்ளிப்பாளையம் சாலையில் உள்ள சாணார்பாளையம் பகுதியில் கூட்டம் நடத்த, அ.தி.மு.க., சார்பில் அனு-மதி கோரப்பட்டுள்ளது. அப்பகுதியை, நேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.இதில் ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன், குமாரபாளையம் நகர செயலர் பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை