திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
ப.வேலுார்: ப.வேலுார், திருஞானசம்பந்தர் மடாலயம் மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை சார்பில், கலிக்கம் கண்சிகிச்சை முகாம், நேற்று நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து, சித்தா டாக்டர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ''உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றை கண்கள் வழி-யாக ஊற்றி குணமாக்குவது கலிக்கம் சிகிச்சை.இதனால் கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், கண்புரையை சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்-பபை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலவீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில், அசைவம் சாப்பிடக்கூடாது.ஐ.ஒ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்-ணயம் இல்லை,'' என்றார்.மாதந்தோறும், 1, 16 தேதிகளில் ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்திலும், ஒவ்வொரு மாதமும், 25ல் ப.வேலுார் செட்-டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்-திலும், கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.