உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

குப்பைக்கு தீ வைத்தால் போலீசில் புகார் களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

பள்ளிப்பாளையம்: 'ஆவத்திபாளையம் பகுதி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளுக்கு தீ வைத்தால், போலீசில் புகாரளிக்கப்-படும்' என, களியனுார் பஞ்., நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்.,க்குட்பட்ட ஆவத்தி பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை, துாய்மை பணியாளர்கள், ஆவத்திபா-ளையம் பகுதி ஆற்றங்கரையோரம் கொட்டுகின்றனர்.மேலும், சமயசங்கிலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இருந்தம் குப்பை, கழிவுகள் இந்த ஆற்றோரத்தில் கொட்டுகின்றனர்.இது தவிர தொழிற்சாலை கழிவுகளும், இரவில் வாகனத்தில் கொண்டு வந்து இங்கு கொட்டுகின்றனர். அவ்வாறு கொட்ட-படும் குப்பை, கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் அதிக-ளவில் சேர்ந்தவுடன் தீ வைத்துவிடுகின்றனர். இதனால், புகை மண்டலமாக மாறி, அருகில் உள்ள குடியிருப்-புக்கு புகை செல்வதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படு-கின்றனர்.மேலும், புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, ஆற்றோரத்தில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளுக்கு தீ வைத்தால் சமபந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்-படும் அதனால், யார் தீ வைத்தாலும், பொதுமக்கள் தகவல் தர வேண்டும் என, களியனுார் பஞ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ