உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாஸ்போர்ட், விசா இன்றி தங்கியிருந்த போதை கும்பலை சேர்ந்த கென்யா இளைஞர்கள்

பாஸ்போர்ட், விசா இன்றி தங்கியிருந்த போதை கும்பலை சேர்ந்த கென்யா இளைஞர்கள்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்-கியிருந்த, கென்யா நாட்டை சேர்ந்த, 4 இளைஞர்கள், போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல் என, தெரிய வந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகர் பகுதியில் தமிழ்நாடு அடுக்கு மாடி குடியிருப்பு உள்-ளது. இந்த குடியிருப்பு பகுதியில், 'சி' பிளாக்கில், 150 எண் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து, 'டெக்ஸ்டைல் பிசினஸ்' செய்வதாக கூறி, கடந்த, இரண்டு மாதமாக கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்கள், 4 பேர் வசித்து வந்தனர்.இந்நிலையில், சென்னையில் இருந்து தேசிய போதைப்-பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 5 பேர், நேற்று அதிகாலை அன்னை சத்யா நகர் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து, கென்யா இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் சோதனை நடத்தினர். அப்போது ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற, 3 இளைஞர்கள் தப்-பினர்.இவர்களிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்-களும் இல்லாததும், பெங்களூருவில் போதைப்பொருள் விற்-பனை வழக்கில், ஜாமினில் வெளிவந்த, நால்வரும் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜராகதது தெரியவந்தது. சிக்கிய இளைஞர் அளித்த தகவல்படி, தலைமறைவான மற்ற, மூவ-ரையும் தேடும் பணியில், தேசிய போதைப்பொருள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி