உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அறிக்கை

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அறிக்கை

குமாரபாளையம்: குமாரபாளையம், நகராட்சி கமிஷனர் கணேசன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்ராம்சிங் என்பவரால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆணைகளின் படி, மனித கழிவுகளை, மனிதர்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில், எங்கும் கண்டறியப்படவில்லை என தெரிய வருகிறது. ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், 15 நாட்களுக்குள் நகராட்சிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ