உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுமை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

சுமை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

குமாரபாளையம், குமாரபாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45; சுமை துாக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். காலை, 11:15 மணியளவில் சுந்தரம் நகர் பகுதியில் லாரியில் மூட்டை இறக்க சென்றபோது, திடீரென லாரியில் உள்ள மூட்டை மீது மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி, 35, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ