மேலும் செய்திகள்
காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை
13-Sep-2025
நாமக்கல்: நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரப்பன். முன்னாள் பஞ்., தலைவர். அப்பகுதியில், இவருக்கு சொந்த-மான விவசாய கிணறு உள்ளது. இங்கு, 45 வயதுள்ள ஆண் சடலம் மிதந்தது. சம்பவ இடத்துக்கு நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அவர், கால்தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்-றனர்.
13-Sep-2025