மருத்துவ மதிப்பீடு முகாம் மா.திறனாளிகளுக்கு அழைப்பு
மோகனுார்: மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாளை காலை, 9:00 மணிக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்-பீடு முகாம் நடக்கிறது. இதில், மோகனுார் ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் மருத்-துவச்சான்று, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்-குதல், ரயில், பஸ் பாஸ் வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்-குவதற்கு பதிவு, உதவித்தொகைக்கான பதிவு, முதல்வர் காப்-பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு போன்ற செயல்பாடுகள் நடக்கிறது.இந்த சேவைகள் தேவையுள்ள அனைத்து மாற்றுத்திறனா-ளிகள், மோகனுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க, நடு-நிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும் பங்கேற்று பயன்பெற அழைக்கப்படு-கின்றனர்.