உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் அஞ்சல் துறை சார்பில் தேசியக்கொடி பேரணி

நாமக்கல்லில் அஞ்சல் துறை சார்பில் தேசியக்கொடி பேரணி

நாமக்கல், நாமக்கல் அஞ்சல்துறை சார்பில், நேற்று தேசியக்கொடியுடன் பேரணி நடந்தது. இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் கோட்ட, இந்திய அஞ்சல் துறை சார்பில், ஹர் கர் திரங்கா பிரசாரத்தின் நோக்கமாக இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம் என்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் நேற்று தேசியக்கொடியேந்தி பேரணி சென்றனர்.நாமக்கல் தலைமை அஞ்சலகத்திலிருந்து, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா, கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பி.எஸ்.என்.எல்., அலுவலகம், மோகனுார் சாலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பாங்க் வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகத்தை பேரணி வந்தடைந்தது. கோட்ட, தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலக ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ