உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடமாநில தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு

வடமாநில தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு

ப.வேலுார்: பீஹார் மாநிலம், சம்பரன் மாவட்டம், சிம்ரா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ராம்வில் மகன் ராகேஷ் குமார் 27; இவர் பரமத்தி அருகே, குன்னமலை தனியார் இரும்பு கம்பி தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த, 19ல் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள பூங்கொடி என்பவருடைய விவசாய தோட்டத்து கிணற்றில் ராகேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ