உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

வெண்ணந்துார், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், வெண்ணந்துார் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த, 1 முதல் 5ம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்கள் நடந்தது.வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுந்தரராஜன் ஆகியோர் துவக்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். பயிற்சியில் பாடநுால், ஆசிரியர் கையேடு மற்றும் பயிற்சி நுால்கள் வழங்கப்பட்டன. மாநில அடைவு தேர்வு 2025ன் தரவுகள் மற்றும் முதல் பருவத்தில் பாடங்களுக்கான கற்றல் விளைவு, மாதாந்திர தேர்வு, தொகுத்தறி மதிப்பீடு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.பயிற்சியில், 112 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் சுந்தரராஜன், சுரேந்திரன், கவிதா, ஜெகதீஷ் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாண்டித்துரை, ஆனந்த் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை