உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒடிசா தொழிலாளி விபரீத முடிவு

ஒடிசா தொழிலாளி விபரீத முடிவு

நாமக்கல்,:ஒடிசா மாநிலம், கோராப்பூரை சேர்ந்தவர் லட்சுமணன் காமார், 22. இவர் நாமக்கல் அருகே உள்ள செங்காளிகவுண்டனுாரில் தங்கி, கிரைண்டர் கல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை லட்சுமணன் காமார், தான் தங்கியிருந்த வீட்டின் முன் உள்ள வேப்ப மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு சென்ற நாமக்கல் போலீசார் பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை