உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து பயணி பலி; 6 பேர் படுகாயம்

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து பயணி பலி; 6 பேர் படுகாயம்

ப.வேலுார்: ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானார். கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, கொடைக்கானலுக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில், 15 பயணியர் இருந்தனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஜோசப் சுந்தர், 47, பஸ்சை ஓட்டினார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ராசாம்பாளையம் அருகே மேம்பாலம் கட்டுமான பணி நடக்கிறது. அதனால், அணுகுசாலை வழியாக வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், வழிகாட்டி பலகை வைக்கவில்லை. இதனால் வேகமாக சென்ற ஆம்னி பஸ், அணுகு சாலை பிரியும் இடத்தில் திடீரென பிரேக் பிடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வினோத் கண்ணன், 38, பலியானார். மேலும், காவியா, 27, மனோஜ், 29, உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். பரமத்தி போலீசார், ஜோசப் சுந்தர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை