உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கல்லுாரியில் பனை விதை நடவு

அரசு கல்லுாரியில் பனை விதை நடவு

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், பனை விதை நடும் நிகழ்ச்சி, உலக ஓசோன் தின நிகழ்ச்சி நடந்தது. கல்-லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வன அலு-வலர் கலாநிதி, பனை மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல் பாது-காப்பில் பனை மரத்தின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, ஓசோன் படலம் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.கல்லுாரி விரிவாக்க அமைப்புகளான யூத் ரெட் கிராஸ், செஞ்-சுருள் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம் மற்றும் உள்தர உறுதி மையம் ஆகியவை இணைந்து பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பனை விதைகளை விதைக்கும் பணி மேற்கொள்-ளப்பட்டது. மாவட்ட பசுமை இயக்கம் தொடர்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், பசுமை களப்பணியாளர் கிஷோர் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை