கறிக்கடைகளில் குவிந்த மக்கள்
நாமகிரிப்பேட்டை: புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிறான நேற்று, ஆடு, கோழி, மீன் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி ரோட்டில் தான் அதிக கறிக்கடைகள் உள்ளன. நேற்று காலை, 10:00 மணிவரை இந்த சாலையில் வாகன நெரிசல் இருந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசிபுரத்தில் காட்டூர் ரோடு, பட்டணம் ரோடு, மார்க்கெட் பகுதிகளில் இருந்த கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மாலை வரை இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. வழக்கத்தை விட இரண்டு மடங்கு வியாபாரம் ஆனதாக கறிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.