மாணவிக்கு பாலியல் தொல்லை பி.டி., வாத்தியார் மீது போக்சோ
ப.வேலுார், ப.வேலுார் அருகே, அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 42; இவர், ப.வேலுார் அருகே, பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பாண்டமங்கலம் அரசு பள்ளியின், 15 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகாரளித்தனர். ப.வேலுார் மகளிர் போலீசார், உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். பள்ளி திறக்கும் நேரத்தில், இச்சம்பவம் பாண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.