உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொக்லைன் உரிமையாளர்கள்இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்

பொக்லைன் உரிமையாளர்கள்இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்

குமாரபாளையம்,:குமாரபாளையத்தில், பொக்லைன் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதால், நுாற்றுக்கும் மேற்பட்ட பொக்லைன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து பொக்லைன் உரிமையாளர்கள் கூறியதாவது:டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனத்தின் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட பல காரணங்களால், தொடர்ந்து பழைய கட்டணத்திற்கு வேலை செய்ய முடிவதில்லை. இரண்டு மணி நேர வேலைக்கு, குறைந்தபட்ச தொகை 3,000 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளோம். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, 1,300 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இன்றும் தொடர்கிறது. பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ