விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் விமரிசையாக நடந்த பொங்கல் விழா
திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் சார்பில், பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்-டது. தாளாளர் கருணாநிதி தலைமை வகித்தார். விழாவில், உழ-வர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், மாணவியர் புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கி வரும் பொங்கலை கண்டு குலவ சத்தமிட்டும், பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டும், பொங்கல் திருநாளை வரவேற்-றனர்.தமிழர்களின் பாரம்பரியத்தை ஓங்க செய்யும் பறை இசை நிகழ்ச்-சியும் நடந்தது. விழாவின் மற்றொரு சிறப்பாக, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவியரின் கலை நிகழ்ச்-சிகள் நடந்தன.கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி, இணை நிர்-வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராக-நிதி, துணைத்தலைவர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், செயல் இயக்குனர் குப்பு-சாமி, ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், கல்லுாரி முதல்-வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.