பள்ளி ஆசிரியர்களுக்கான முன் ஓய்வு குறித்த பயிற்சி
நாமக்கல், நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டரங்கில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முன் ஓய்வு தொடர்பான, மூன்று நாள் பயிற்சி வகுப்பை, அண்ணா நிர்வாக கல்லுாரி துணை ஆட்சியர் மாறன், உதவி கணக்கு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பயிற்சியில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள், ஓய்வு காலங்களில் பணப்பலனை எவ்வாறு கையாள்வது மற்றும் உடல் நலனை பாதுகாப்பது குறித்த உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ஓய்வு காலத்தில் உடல் நலனை காக்க யோகா உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு பெறும் நிலையில் உள்ள, 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.