தே.பருப்பு ஏலம் நாளை ரத்து
ப.வேலுார்,ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இந்த சந்தைக்கு ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, சேலம், கரூர், கோவை, ஈரோடு வெளிமாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நாளை, விஜயதசமி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரசு விடுமுறையால் தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது என தேசிய வேளாண்மை சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.