ராஜகோபுரம் கட்ட கால்கோள் விழா
ராஜகோபுரம் கட்ட கால்கோள் விழாவெண்ணந்துார், நவ. 24-வெண்ணந்துாரில், முத்து குமாரசாமி, பூபதி மாரியம்மன், பாவடி விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு புதிய கோவில் கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவில்களுக்கு நுழைவு வாயில் பகுதியில் ராஜகோபுரம் கட்டுவதற்கு, நேற்று காலை கால்கோள் நிகழ்ச்சி நடந்தது. இதில், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 1,000 கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.