உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்

சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்.,க்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் சில இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீர் வீணாகி, குடியிருப்பு பகுதிக்கு முழுமையாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் சேதம் குறித்து பொதுமக்கள், களியனுார் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சேதமடைந்த குடிநீர் குழாயை கண்டறிந்து சீரமைக்கும் பணி, நேற்று தொடங்கியது. மேலும், உடைந்திருந்த குழாய்களை மாற்றி, புதிதாக அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை