உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கள்ளச்சாராயம் விற்பனை 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்

கள்ளச்சாராயம் விற்பனை 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்-லைக்குட்பட்ட பகுதியில், மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்-கரபாண்டியன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்-காக, 5 லிட்டர் கள்ளச்சாராயம், 150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசா-ரணை செய்ததில், பழனிவேல், 37, பிரகாஷம், 32 ஆகியோர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.இந்நிலையில், பழனிவேல், பிரகாசம் ஆகிய இருவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, நாமக்கல் கலெக்-டருக்கு, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் பரிந்தரை செய்தார். அதன்-படி, கலெக்டர் உமா, இருவரையும் குண்டாசில் கைது செய்ய உத்-தரவிட்டார். தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் உள்ள இருவ-ருக்கும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்த-ரவு நகல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை