சமூக சேவகர், தொண்டு நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது பெற அழைப்பு
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:சுதந்திர தின விழாவின் போது, தமிழக அரசால், 'சிறந்த சமூக சேவகர்' மற்றும் 'தொண்டு நிறுவனத்திற்கான' விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள், தமிழக அரசின் இணையதளத்ததில் மட்டுமே வரவேற்கப்படுகிறது. வரும், ஜூன், 12 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். இவ்விருது பெற, தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.குறைந்த பட்சம், ஐந்தாண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொண்டு நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.