உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, மரூர் பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, நேற்று மாசி மாத சனிக்கிழமையை-யொட்டி, பெரியமலை அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேய-ருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 21 வகை-யான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது. தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்-பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், மலை உச்-சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை