உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம், சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. ஆவணி கிருத்திகையையொட்டி, நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை வரை, மூலவர் கந்தசாமிக்கு, 16 வகையான மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். கோவில் முழுவதும் பல வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ