உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெலுங்கு புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

தெலுங்கு புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. சுவாமிக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அதேபோல் தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, அமா-வாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்-படும்.அதன்படி, தெலுங்கு வருடப்பிறப்பான, நேற்று காலை, 9:00 மணிக்கு வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தங்-கக்கவசம் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. தெலுங்கு வருட பிறப்பு மற்றும் பங்குனி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்-பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரி-சனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை