29 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவியர் ஆசிரியர்களுக்கு மலர் துாவி வரவேற்பு
ராசிபுரம்: ராசிபுரத்தில், 29 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவியர், தங்களது ஆசிரியர்களுக்கு மலர் துாவி வர-வேற்றனர்.ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலை பள்ளியில், கடந்த, 1989 முதல், 1996 வரை பள்ளியில் பயின்ற மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. முன்னதாக, தங்களுடைய ஆசிரியர்-களை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர். ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வரும்போது, அவர்களுக்கு முன்னாள் மாணவியர் மலர் துாவி வரவேற்றனர். நடக்க முடியாத ஆசிரியரை சேரில் சுமந்தபடி வகுப்பறைக்கு அழைத்து வந்தனர்.மேலும், வகுப்பறைக்கு வந்த முன்னாள் மாணவியர், ஒருவருக்-கொருவர் தங்களது விபரங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். மாணவியர் படித்த-போது இருந்த வருகை பதிவேட்டை, ஆசிரியர் ஒருவர் எடுத்து வந்தார். அதில் உள்ள பெயர்களை வாசிக்க, வாசிக்க முன்னாள் மாணவியர் உள்ளேன் அம்மா என கூறி, தங்களது பள்ளி காலத்து நினைவுகளை திரும்பி பார்த்தனர்.தொடர்ந்து, முன்னாள் மாணவியர் சினிமா பாடல்களுக்கு பாட்டு பாடி உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியர் கூறுகையில், '29 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்-துள்ளோம். அப்போது கல்வி வழங்கிய ஆசிரியர்கள் பாட முறை ஆகியவற்றால் தான் தாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம். ஆனால், இந்த கால மாணவர்களுக்கு அது கிடைப்பதில்லை. தியாகத்தோடு பணியாற்றிய ஆசிரியர்களின் சேவையை மறக்க முடியாது' என்றனர்.