புகையில்லா போகி உறுதி மொழி ஏற்பு
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.செயல் அலுவலர் நாகேஷ் தலைமை வகித்தார். இளநிலை பொறியாளர் சுரேஷ்ராஜன் முன்னிலை வகித்தார். இதில், பொது-மக்கள் தங்கள் வீடுகளின் முன் கழிவுகளை எரிக்காமல், வீடு தேடி வரும் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்; புகையில்லா போகி கொண்டாடுவோம் என, உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.