ஜாமினில் வந்தவர் தேடப்படும் குற்றவாளி
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 2001ல் நடந்த கொலை வழக்கில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, முத்தனம்பாளையம், 8வது வார்டை சேர்ந்த சின்னப்பையன் மகன் விஜய், ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். அதை தொடர்ந்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம்--2ல் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஜூன், 3க்குள் திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம்--2ல், ஆஜராக நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.