உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி விழா

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி விழா

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில், தீர்த்தவாரி மற்றும் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த, 19ம் தேதி, அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் விநாயகர் பராசக்தி அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று ஆடிப்பூர தீர்த்தவாரி உற்சவத்தையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் நடந்தது. பின்னர், மாடவீதியில் சுவாமி வலம் சென்று, கோவிலிலுள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜை நடந்தது. அங்கு சூல ரூப பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமியிடமிருந்து சூலத்தை பெற்று அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில், அருணாசலேஸ்வரர் கோவில் வளைகாப்பு மண்டபத்தில், பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும் நடந்தது. நேற்றிரவு கோவில், 2ம் பிரகாரத்தில் தீமிதி விழாவுடன், உற்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ