பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.23 லட்சத்திற்கு வர்த்தகம்
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு கஸ்துாரிப்பட்டி, எருமப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். எருமப்பட்டி பகுதியில் தற்போது நல்ல மழை பெய்துள்ளதால், சந்தைக்கு ஆடுகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கும் ஆடுகள் வரத்து குறைந்ததால், 23 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.