உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து சாவு

அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து சாவு

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே ஜமீன் இளம்பிள்ளை காவேரி ஆற்றின் அருகே கடந்த, 10ம் தேதி அடையாளம் தெரியாத, 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்துள்ளார். மேல் சட்டை அணியாமல் வெள்ளை வேட்டி மட்டும் கட்டியிருந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்நிலையில், நேற்று முதியவர் இறந்தார். ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ