உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீரகாரன் கோவில் கும்பாபிஷேக விழா

வீரகாரன் கோவில் கும்பாபிஷேக விழா

எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் புடவைகாரியம்மன், நாகம்மாள், எல்லம்மாள், லிங்கம்மாள், கன்னிமார், வீரகாரன் சுவாமிகளுக்கு புதிய கோவில் கட்டப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்துக்கொண்டு புடவைகாரியம்மன் கோவிலுக்கு வரப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு மேல் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், முதற்கால ஹோம பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு சாந்தி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் நடந்தது. காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ