உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதியவர் மீது தாக்குதல் தொழிலாளிக்கு காப்பு

முதியவர் மீது தாக்குதல் தொழிலாளிக்கு காப்பு

ராசிபுரம்: ராசிபுரம், கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி மகன் பாலு, 43; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் புதுச்சத்திரத்தை சேர்ந்த குமரவேல் மகன் தனசேகரன், 63, நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த பாலு, தனசேகரன் பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலு, அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனசேகரனை தாக்கினார். இதில் காயமடைந்த தனசேகரன், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, ராசிபுரம் போலீசார், பாலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை