உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 95 பேர் ஆப்சென்ட்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 95 பேர் ஆப்சென்ட்

ஊட்டி;நீலகிரியில், 10 வகுப்பு அறிவியல் பாடத்தில், 95 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த அறிவியல் பாடத்தில், 6,957 மாணவர்களில், 6,862 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 95 பேர் வருகை புரியவில்லை.தனி தேர்வர்களில், அறிவியல் பாடத்தில், மொத்தம், 152 பேரில், 141 பேர் தேர்வு எழுதினர். 11 பேர் வருகை புரியவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்ற மொத்தம், 262 மாணவர்கள். அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், 59 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 95 பேர் வருகை புரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை