உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடநாடு வழக்கில் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி.., போலீசார் சம்மன்

கோடநாடு வழக்கில் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி.., போலீசார் சம்மன்

ஊட்டி:கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு , உதயகுமார் ஆகியோரை வரும் 25ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அதேபோல், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோரை வரும் 30 ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி ., போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.வழக்கில் தீபு 3 வது, ஜம்ஷீர் அலி 4வது, உதயகுமார் 7வது, ஜித்தின் ஜாய் 10வது குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ