மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு
12-Feb-2025
ஊட்டி; மசினகுடி ஸ்ரீ மசினி அம்மன் கோவிலில் 'ஜாத்திரெ' திருவிழா சிறப்பாக நடந்தது.மசினகுடி ஸ்ரீ மசினி அம்மன் கோவிலில், தொதநாடு சீமை படுகர் நலச்சங்கம் சார்பில், ஆண்டு தோறும் 'ஜாத்திரெ' திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை, 6:00 மணிக்கு நடை திறப்பு விழாவும், தொடர்ந்து கூடலுார் தேவாலாவிலிருந்து தென்னம் பூ கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை முதல் இரவு வரை பாரம்பரிய ஆடல், பாடல் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சோலுார் பூஜாரிகள் மசினகுடியில் இருந்து பொக்காபுரம் கோவிலுக்கு பூக்கள் எடுத்து சென்றனர். காலை, 10:00 மணிக்கு பொக்காபுரத்திலிருந்து மசினகுடிக்கு ஆடுகள் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:30 மணிக்கு சீமை பூஜை நடந்தது. திரளான படுகரின மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
12-Feb-2025