ஊட்டி பூங்காவில் பள்ளி மாணவர்கள் இன்ப சுற்றுலா
ஊட்டி, ;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு பள்ளி மாணவர்கள் இன்ப சுற்றுலா வந்தனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் இங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மலர்களை காண வருகின்றனர். வார நாட்கள் உட்பட பிற நாட்களில் கணிசனமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு கோடை சீசன் மே மாதத்தில் நடைபெறுவதை ஒட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பூங்காவுக்கு இன்ப சுற்றுலா வருகின்றனர். பூங்காவில் பாத்திகள், கண்ணாடி மாளிகைகளில் உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.