மேலும் செய்திகள்
தேயிலை ஏலத்தில் ரூ.22.47 கோடி மொத்த வருமானம்
01-Feb-2025
குன்னூர்; தென் மாநிலங்களில் உள்ள, 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 39.02 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 5வது ஏலத்தில், '12.79 லட்சம் கிலோ இலை ரகம்; 3.28 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்' என, மொத்தம், 16.07 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '11.61 லட்சம் கிலோ இலை ரகம்; 2.94 டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 14.55 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 119.86 ரூபாய் என இருந்தது. 1.55 லட்சம் கிலோ தேக்கமானது. மொத்த வருமானம், 17.45 கோடி கிடைத்தது. ஒரே வாரத்தில், 1.38 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.நீலகிரி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 9வது ஏலத்திற்கு, 1.13 லட்சம் கிலோ வந்தது. 1.10 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 119.23. ரூபாயாக இருந்தது. பொதுவாக குன்னுார் ஏல மையத்தை விட சராசரி விலை குறைவாக இருக்கும் 'டீசர்வ்' ஏலத்தில், இந்த முறை குன்னுார் ஏல மைய விலையை போன்று, டீசர்வ் ஏலத்திலும் விலை கிடைத்தது. 1.30 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த வாரத்தை விட, 5 லட்சம் ரூபாய் அதிகரித்தது. இரு ஏல மையங்களில் சேர்த்து, 18.75 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கோவை ஏலத்தில், 4.46 லட்சம் கிலோ வந்ததில், 3.94 லட்சம் கிலோ விற்பனையானது. 5.57 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை, 141.31 ரூபாய் என இருந்தது. கொச்சி ஏல மையத்தில், 9.63 லட்சம் கிலோ வந்ததில், 8.75 லட்சம் கிலோ விற்பனையானது. 14.70 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவிற்கு, 168 ரூபாய் என இருந்தது. தென் மாநிலங்களில் உள்ள இந்த, 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 39.02 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
01-Feb-2025