மேலும் செய்திகள்
உருளை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
29-Aug-2024
ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாரான வெள்ளை பூண்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.குறிப்பாக, நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாக உள்ளது. நீலகிரி பூண்டுக்கு எப்போதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான எம். பாலாடா, பட்பயர், கொல்லிமலை ஓர நள்ளி, பி. மணிஹட்டி, கடநாடு, கார பிள்ளு மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளிலும் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, இரண்டாவது போகம் அறுவடைக்கு தயாரான வெள்ளை பூண்டுகளை விவசாய நிலங்களில் தரம் பிரித்து, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். ஊட்டி மார்க்கெட்டில், பூண்டு கிலோ, 400 ரூபாய், பிற மாநில பூண்டு கிலோ, 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
29-Aug-2024